நாச்சியார் திருமொழி : 82
நாச்சியார் திருமொழி : 82 (பாசுரம் 10(9)) ஆண்டாளுக்கு மனமெல்லாம் கண்ணன் நினைவாக இருந்தது. அவள் உயிரோடும் உணர்வோடும் கலந்த கண்ணனின் நினைவு அவளுள் அலை அலையாய் அடித்துக்கொண்டிருந்தது. இதயம் துடிக்கும் போதெல்லாம் அவன் நினைவும் சேர்ந்து சேர்ந்து அலையடித்துக் கொண்டே இருந்தது, கண்ணன் அவள் சுவாசமாய் இருந்ததால் அடிக்கடி பெருமூச்சு பெரும் காற்றாக வந்து கொண்டே இருந்தது. அவள் அதிகாலையில் வழக்கம் போல் எழுந்தாள். அதுவரை கனவில் இருந்த கண்ணனின் நினைவு இப்போது அவளோடு கண் […]