பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகப்பெருமான் ஆலயங்கள் : கண்ணனூர் பால சுப்பிரமணியர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கண்ணனூர் பால சுப்பிரமணியர் ஆலயம். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அமைந்திருக்கின்றது இந்த ஆலயம், காலத்தால் மிக மூத்த இந்த ஆலயமானது புராணக் காலத்திலே உண்டு, ராஜயோகம் தரும் இந்த ஆலயம் முருகப்பெருமான் இந்திரனை வென்று அவனின் பிணிமுக யானையினை வாகனமாக கொண்ட கோலத்தைக் காட்டி முன்பே ராஜகுருக்களால் அமைக்கப்பட்டது, மிகத் தொன்மையானது. முருகப்பெருமான் போர்க்கடவுள் அப்படியே தமிழ் கடவுள் என்பது வெறுமனே தமிழ் மொழிக்காக மட்டுமல்ல, முருகப்பெருமான் வழிபாடு லௌகீகமும் ஆன்மீகமும் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றத்தூர் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றத்தூர் முருகப்பெருமான் ஆலயம். முருகப்பெருமான் ஆலயங்களில் புகழ்பெற்றதும் தொன்மையானதுமான இந்த ஆலயம் திருப்போரூருக்கும் திருத்தணிகை மலைக்கும் இடையே சிறிய குன்றில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வரலாறு முருகப்பெருமானிடம் இருந்தே துவங்குகின்றது. முருகப்பெருமானின் சிறப்பே அவர் எல்லா வகை போரையும் செய்தார் என்பது. வான் வழி, கடல் வழி , நிலவழி போர் என எல்லாமும் செய்தவர் அவர், அந்த முருகப்பெருமான் திருபோரூரில் சில அசுரர்களை ஒழித்துவிட்டு தணிகை மலை நோக்கி செல்லும் போது […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வில்பட்டி முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வில்பட்டி முருகன் ஆலயம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலையில் அமைந்துள்ளது இந்த வில்பட்டி வெற்றி வேலப்பர் ஆலயம், இது தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் மகா தொன்மையானது. எவ்வளவுக்குத் தொன்மையானது என்றால் அகத்தியர் போகர் காலத்தில் உருவான ஆலயம் இது, இரு வகையில் இது தொன்மையானது. இந்த மலையில்தான் அகத்தியரின் சீடரான போகர் வசித்தார், இங்கு நிரம்பியிருக்கும் மூலிகைகளை ஆராய்ந்து மருந்து செய்வது, மானுட இனத்துக்காய்ப் பெரிய தவத்தை இயற்றுவது எனப் போகர் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : சொர்ணமலை முருகன் ஆலயம் கோவில்பட்டி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : சொர்ணமலை முருகன் ஆலயம் கோவில்பட்டி. தென்முனையில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது சொர்ணமலை அல்லது கதிரேசன் மலை எனும் முருகப்பெருமான் ஆலயம் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. இந்த முருகப்பெருமானின் வரலாறு இலங்கை கதிர்காமம் ஆலயத்தில் இருந்து துவங்குகின்றது. பொதுவாக தென்முனை மக்களுக்கு அன்றைய பிரதான தொழில்களில் ஒன்று வணிகம் , அதிக மழைவளம் ஆறுவளம் இல்லா அப்பூமியில் நாயக்கர் காலத்தில் உருவான சாலை வசதிகளும் இதர வசதிகளும் வியாபாரத்தைப் பெருக்கின‌. சாத்தூர், சிவகாசி […]

சத்ரபதி சாம்பாஜி : 20

சத்ரபதி சாம்பாஜி : 20 தன்முன் நின்ற அந்த வீரனை நோக்கினான் ஔரங்கசீப். நல்ல உயரம், கூர்மையான கண்கள், உடும்பு போன்ற உடற்கட்டு, நீளமான கைகள் என அவன் தோற்றத்திலே ஔரங்கசீப்பைக் கவர்ந்தான். நல்ல வீரன் இன்னொரு போர் வீரனைக் கவர்வான் என்பதால் அவனை எடைபோட்ட ஔரங்கசீப் மேற்கொண்டு சோதனைக்காக மறுநாள் களத்துக்கு அவனைச் சோதிக்கும் பொருட்டு வரச்சொன்னான். அவனுக்கு எல்லாப் பரீட்சைகளும் தொடங்கின, அவன் அருகில் ஆயுதங்கள் வைக்கப்பட்டன. அவை மெழுகு நுனியில் வைக்கப்பட்ட போலி […]

சத்ரபதி சாம்பாஜி: 19

சத்ரபதி சாம்பாஜி: 19 சாம்பாஜியினை அடக்க இனிப் பெரிய போர்களால் முடியாது, மெல்ல மெல்ல அவனின் வருமானமெல்லாம் முடக்கி அவனின் இதர எல்லைப் பகுதிகளை முடக்கி வரவேண்டும், இப்போர் சிறிது காலம் நீடிக்கும் என்பதை உணர்ந்த ஔரங்கசீப் தேர்ந்த திட்டம் ஒன்றை வகுத்தான். அதன்படி அவன் இலக்கு சாம்பாஜி அன்று. மாறாக, இந்துராஜ்ஜியத்துக்குக் கப்பம் கட்டி வந்த பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தானியங்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்வது. இந்துஸ்தானின் தென்பகுதி அவ்வப்போது மொகலாயருக்கு கப்பம் கட்டுவதும் பின் […]

சத்ரபதி சாம்பாஜி : 18

சத்ரபதி சாம்பாஜி : 18 சாம்பாஜியினைப் பலமுனையில் பலபேரைக் கொண்டு தாக்கியும் வெற்றிப் பெறமுடியாத ஔரங்கசீப் மிகுந்த யோசனைக்குள்ளானான், அவன் தன் 10 வயதில் இருந்தே போர்களைத் தொடங்கியவன், அப்படியானவன் தன் 50 வருட வரலாற்றில் தோற்ற ஒரே அரசன் வீரசிவாஜி. அதே நேரம் ஔரங்கசீப்பும் சிவாஜியும் நேருக்கு நேர் நின்று போரிடும் சூழல் வரவில்லை. சிவாஜிக்கும் அது நல்ல காலம். ஒருவகையில் ஔரங்கசீப்புக்கும் நல்ல காலம், இல்லையேல் ஔரங்கசீப்பினை எப்படியாவது வீழ்த்தியிருப்பான் சிவாஜி. அந்தக் காலக்கட்டத்தில் […]

சத்ரபதி சாம்பாஜி : 17

சத்ரபதி சாம்பாஜி : 17 சாம்பாஜி போர்ச்சுகீசியருடன் மோதிக் கொண்டிருந்த நேரம், ஔரங்கசீப்பின் அடுத்த நடவடிக்கை என்ன என எல்லாரும் அச்சத்துடன் எதிர்பார்த்த நேரம் இன்னொருபுறம் துர்க்காதாஸ் தலைமையில் ராஜபுத்திரர்கள் டெல்லிமேல் பாயலாம் எனும் இன்னொரு எதிர்பார்ப்பும் இருந்தது. ஜெய்சிங்கின் மகன் ராம்சிங் டெல்லிக்குக் காவலாக இருந்தான், அவனோடு களத்தில் இருந்தவன் திலியர்கான், அந்தத் திலியர்கான் திடீரென செத்துக் கிடந்தான், விஷம் கலந்த உணவினை அவன் உண்டு செத்தது பின் தெரியவந்தது. திலியர்கான் தாவுத்சாய் மறைந்தான் எனும் […]

சத்ரபதி சாம்பாஜி : 16

சத்ரபதி சாம்பாஜி : 16 அப்போது ஔரங்காபாத்துக்கு வந்திருந்து சாம்பாஜிக்கு எதிராக படை நகர்த்தினான் ஔரங்கசீப், அவனோடு அவன் மகன் ஆசம் ஷா உள்ளிட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். இங்கே அவன் தன் முழுப்பலத்தோடும் படையோடும் அமர்ந்திருக்க டெல்லி அதிக காவல் இல்லாமல் காலியாக இருந்தது. ராஜபுத்திரரின் ராஜபுத்திர பகுதியில் இருந்து டெல்லிக்கு பாய்வது இப்போது எளிதான விஷயம், பாதுஷா அவுரங்கசீப்புமில்லை அவன் சேனையுமில்லை என்பதில் அங்கு பாதுகாப்பே பெரிதாக இல்லாமல் இருந்தது ஔரங்கசீப்பும் அவன் மகன்களும் ஔரங்காபாத்தில் […]

சத்ரபதி சாம்பாஜி : 15

சத்ரபதி சாம்பாஜி : 15 சாம்பாஜி வடக்கே நகர்ந்து கொண்டிருந்தான், பெரும் போர்சூழல் வடக்கே கடும் சவாலை கொடுத்துக் கொண்டிருந்தது. பிரம்மாண்ட சேனையும் பெரும் நிதிவசதியும் கொண்டிருந்த ஔரங்கசீப் பலமுனைகளில் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தான். ராஜபுத்திரர் பகுதியில் துர்க்காதாஸும் இந்துராஜ்ஜிய பகுதியில் ஹம்பிராவ் மோடியும் பெரும் பதிலடியினைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சாம்பாஜி சிக்கதேவராயனை ஒடுக்கி கப்பம் கட்ட வைத்தபடி வடக்கே சென்றிருந்தான். சிக்கதேவராயனோ அடிபட்ட நாகம்போல் மனதால் சீறிக்கொண்டிருந்தான், அவனால் ஏதும் செய்யமுடியவில்லை என்பதால் தவித்துக் கொண்டிருந்தான். […]